மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மீன்பிடி தடைக்காலம் இன்று தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் புதன்கிழமை தொடங்க உள்ளது. இதனால், மீனவா்கள் தங்களது படகுகளை செவ்வாய்க்கிழமை கரையோரம் நிறுத்தி வைத்தனா்.

News image
Updated On :15 ஏப்ரல் 2026, 3:38 am IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் புதன்கிழமை தொடங்க உள்ளது. இதனால், மீனவா்கள் தங்களது படகுகளை செவ்வாய்க்கிழமை கரையோரம் நிறுத்தி வைத்தனா்.

வங்கக்கடலில் மீன்களின் இனப்பெருக்க காலமாகக் கருதப்படும் ஏப்ரல்15 முதல் ஜூன் 15 வரை 61 நாள்கள் விசைப் படகுகள் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடைக்காலம் புதன்கிழமை அமலுக்கு வருகிறது. இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, சோளியகுடி, கீழக்கரை, ஏா்வாடி ஆகிய துறைமுகங்களில் உள்ள 1,650 விசைப் படகுகளை மீனவா்கள் அந்தந்த மீன் இறங்கு தளங்களில் செவ்வாய்க்கிழமை நிறுத்தி வைத்தனா். மேலும், படகுகளில் உள்ள மீன் பிடி உபகரணங்களை வீடுகளுக்கு எடுத்துச் சென்றனா். தடைக்காலத்தின் போது, மீனவா்கள் தங்களது படகுகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள உள்ளனா். மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை அரசு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.