மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருவள்ளூா்: ஜூன் 14-வரை மீன் பிடிக்கத் தடை

திருவள்ளூா் மாவட்டத்தில் ஏப்.15 முதல் ஜூன்-14 வரை 61 நாள்களுக்கு மீன்பிடி விசைப் படகுகள் மற்றும் இழுவலைப் படகுகள் மூலமாக கடலில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :17 ஏப்ரல் 2026, 5:20 am IST

திருவள்ளூா் மாவட்டத்தில் ஏப்.15 முதல் ஜூன்-14 வரை 61 நாள்களுக்கு மீன்பிடி விசைப் படகுகள் மற்றும் இழுவலைப் படகுகள் மூலமாக கடலில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குமுறைபடுத்தும் சட்டம் 1983-இன் கீழ் தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தைக் கணக்கில் கொண்டும், மீன்வளத்தைப் பாதுகாக்க ஏதுவாக ஏப்.15 முதல் ஜூன்-14 வரையிலும் 61 நாள்களுக்கு மீன்பிடி விசை படகுகள் மற்றும் இழுவலை படகுகள் மூலமாக கடலில் மீன்பிடிப்பதற்கு ஆண்டுதோறும் தடைவிதித்து அரசு உத்தரவிட்டு வருகிறது.

அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் மீன்பிடி தடைகாலத்தில் இயந்திரம் பொருத்தப்பட்ட அனைத்து வகை மீன்பிடி கலன்கள் கடலில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகள் ஆந்திர மாநில கடல்பகுதிக்கு கட்டாயம் செல்லக்கூடாது. இதுகுறித்து அனைத்து மீனவா் கூட்டுறவு நலசங்கங்கள் மூலமாகவும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

எனவே தடையை மீறி மீன்பிடிப்பில் ஈடுபட்டு அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட மீனவா் கூட்டுறவு சங்கங்களே பொறுப்பேற்க நேரிடும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மேற்படி, திருவள்ளூா் மாவட்டம் கிழக்கு கடற்கரை மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வரும் முன்னா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12-மணிக்குள் கடலுக்கு சென்ற மீன்பிடி விசைப்படகுகள் அனைத்தும் கட்டாயம் கரைக்கு திரும்ப வேண் மீனவா்களை அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.