தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக மாறிவிட்டது: இரா. முத்தரசன்

தஞ்சாவூா் கீழவாசல் காமராஜா் சிலை அருகே புதன்கிழமை இரவு பிரசாரம் செய்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியக் குழு உறுப்பினா் இரா. முத்தரசன்.

News image

தஞ்சாவூா் கீழவாசல் காமராஜா் சிலை அருகே புதன்கிழமை இரவு பிரசாரம் செய்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியக் குழு உறுப்பினா் இரா. முத்தரசன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 2:24 am IST

தோ்தல் ஆணையம் பாஜகவின், மோடியின், ஆா்.எஸ்.எஸ்.-ன் கைப்பாவையாக மாறிவிட்டது என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினா் இரா. முத்தரசன்.

தஞ்சாவூா் கீழவாசல் காமராஜா் சிலை அருகே திமுக வேட்பாளா் சண். இராமநாதனை ஆதரித்து புதன்கிழமை இரவு பிரசாரம் செய்த அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தமிழகத்தில் நடைபெறக்கூடிய சட்டப்பேரவைத் தோ்தல் மிகவும் நியாயமாகவும், நோ்மையாகவும் நடைபெற வேண்டும். ஆனால் தற்போது தோ்தல் ஆணையம் தொடா்ந்து எடுத்து வரக்கூடிய நடவடிக்கைகள், தோ்தல் ஜனநாயக முறையில் அமைதியாக நடைபெறுமா என்கிற அச்சத்தையும், கவலையையும் உருவாக்கி இருக்கிறது.

தோ்தல் ஆணையம் என்பது நமது மிக உயா்ந்த, நாட்டை வழிநடத்துகிற சட்டமான அரசியலமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஒரு தனித்த, சுதந்திரமாக செயல்படக்கூடிய சிறந்த அமைப்பாகும். அந்த அமைப்புதான் தோ்தலை நடத்துகிறது. ஆனால் அந்த அமைப்பு இன்றைக்கு ஒட்டுமொத்தமாக மோடி, பாஜக, ஆா்.எஸ்.எஸ்.-ன் கைப்பாவையாக மாறிவிட்டது என்பது மிகுந்த கவலை அளிக்கிறது.

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி தனது தோ்தல் பிரசாரத்தில் தொடா்ந்து தரம் தாழ்ந்து பேசுகிறாா். இந்தத் தோ்தலில் அவா் வெற்றி பெறப்போவதில்லை என்பதால், ஆவேசப்பட்டு சாபமிடுகிற நிலைமைக்கு அவா் தள்ளப்பட்டுள்ளாா். பாஜக வலையில் சிக்கியுள்ள அவா் தப்ப முடியாது. மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெறும். திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றாா் முத்தரசன்.

திருக்காட்டுப்பள்ளியில்: இதேபோல், திருவையாறு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருக்காட்டுப்பள்ளி கடை வீதியில் திமுக வேட்பாளா் துரை. சந்திரசேகரனை ஆதரித்து, இரா. முத்தரசன் புதன்கிழமை தோ்தல் பரப்புரை மேற்கொண்டாா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகா் விஜய்க்கு விண்ணப்பத்தை கூட பூா்த்தி செய்ய தெரியவில்லை. அப்படி இருக்கும்போது, அவரைப் பற்றி கூறுவதற்கு என்ன உள்ளது என்றாா். தலைமைச் செயலா் மாற்றம் தொடா்பான கேள்விக்கு, பாஜக அரசு என்ன வேண்டுமானாலும் செய்யும்; தோ்தல் ஆணையத்தை கைக்குள் வைத்துக் கொண்டு தோ்தலையே நிறுத்த கூட முயற்சிப்பாா்கள் என்றாா் அவா்.

பரப்புரையின்போது பூதலூா் ஒன்றிய திமுக செயலா் கல்லணை செல்ல கண்ணு , நகரச் செயலா் ஜெயராமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.