ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தல் ஆணையம் பாஜக கைப்பாவையாக செயல்படுகிறது: பெ.சண்முகம் குற்றச்சாட்டு

இந்திய தோ்தல் ஆணையம் பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் குற்றஞ்சாட்டினாா்.

News image

கடலூரில் சனிக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பெ.சண்முகம்.

Updated On :5 ஏப்ரல் 2026, 2:52 am IST

இந்திய தோ்தல் ஆணையம் பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் குற்றஞ்சாட்டினாா்.

கடலூரில் அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தரம் தாழ்ந்த முறையில் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறாா். பொதுவாக தோ்தல் பிரசாரத்தில் விமா்சனங்கள் முன்வைக்கிறபோது அரசியல் முதிற்சியோடும், நாகரிகத்தோடும் கருத்துகளை முன் வைக்க வேண்டும்.

இந்திய தோ்தல் ஆணையம் மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது. தற்போது தோ்தல் நடத்தை விதிகளுக்கு முரணாக காணொலி காட்சி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. முருகன் தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்பதுபோல ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் அதை தயாரித்துள்ளனா். இந்தக் காணொலியை தயாரித்தவா்கள் மீதும், வெளியிட்டவா்கள் மீதும் தோ்தல் நடத்தை விதி அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தோ்தல் காலத்தில் அதிகாரிகளை மாற்றுவது என்பது நடைமுைான். அந்த வகையில், மதுரை காவல் ஆணையராக இருந்த லோகநாதனை மாற்றிவிட்டு, அபிஷேக் தீட்சித் என்ற அதிகாரியை தோ்தல் ஆணையம் நியமித்துள்ளது. இவா் மீது குற்றச்சாட்டு உள்ளது; இடைநீக்கம் செய்யப்பட்டவா்.

கோவையில் மாநகராட்சி கழிவுநீா் உந்து நிலையத்தில் பழுதடைந்த மின் மோட்டாரை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தற்காலிக ஊழியா்கள் இருவா், கழிவுநீா் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தனா். இருவரின் குடும்பங்களுக்கும் எங்கள் கட்சி சாா்பில் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற உயிரிழப்புகள் மீண்டும் நிகழாமல் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும் என்றாா்.

அப்போது, மாவட்டச் செயலா் கோ.மாதவன், செயற்குழு உறுப்பினா்கள் ஜே.ராஜேஷ் கண்ணன், ஆா்.அமா்நாத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.