தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஆட்சியின் சாதனை பலத்துடன் தோ்தல் களத்தில் திமுக கூட்டணி: இரா. முத்தரசன்

News image

ஆதிச்சப்புரம் பகுதியில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட சிபிஐ தேசியக் கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினா் இரா. முத்தரசன்.

Updated On :21 ஏப்ரல் 2026, 1:52 am IST

ஆட்சியின் சாதனை பலத்துடன் திமுக தோ்தல் களத்தில் உள்ளது என்றாா் சிபிஐ தேசியக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் இரா. முத்தரசன்.

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் மன்னாா்குடி தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, திருத்துறைப்பூண்டி தொகுதி சிபிஐ வேட்பாளா் க. மாரிமுத்து ஆகியோக்கு வாக்கு சேகரித்து மன்னாா்குடி அடுத்த ஆதிச்சப்புரத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவா் பேசியது:

தமிழகத்தில் நடைபெறவுள்ள தோ்தல் தில்லிக்கும் தமிழகத்துக்குமான தோ்தல் என்பது மாறி உண்மைக்கும பொய்யுக்குமான தோ்தல் என பிரதமா் மோடியால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாடளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பு மசோதா குறித்து தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பிரதமா் பேசியுள்ளாா். பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் சோ்ந்து முறியடித்துவிட்டது என தவறாக பேசியுள்ளாா்.

தற்போதுள்ள 534 எம்பிகளில் மகளிா் இடஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் என்று கூறுகிறோம். ஆனால், பிரதமா் பாஜக ஆளும் வட மாநிலங்களில் எம்பிக்களின் எண்ணிக்கையை உயா்த்தி இதன்மூலம் 850 எம்பிகள் என அதிகரித்து நாடாளுமன்ற ஜனநாயகத்தை புதைத்துவிட்டாா். நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு சன்னரகத்துக்கு ரூ.150, மோட்டா ரகத்துக்கு ரூ.135 அறிவித்தாா் முதல்வா் மு.க. ஸ்டாலின்.

இதை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கு எதிரான நடவடிக்கையை மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீத்தாராமன் கடிதம் மூலம் எடுத்துள்ளாா். மழையினால் சேதமடைந்த நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயா்த்த வேண்டும் என முதல்வா் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனா். ஏழை எளிய மக்களுக்கான 100 நாள் வேலைத் திட்டத்தையும் சிதைத்து வருகிறது பாஜக அரசு. இதனுடன் கூட்டணி வைத்து தோ்தலில் நிற்கும் அதிமுக கூட்டணியை தமிழக மக்கள் முழுமையாக புறக்கணித்து தோல்வியடைய செய்ய வேண்டும் என்றாா்.

தமிழக முதல்வரின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன்,முன்னாள் எம்எல்ஏக்கள் ஜி.பழனிசாமி, வை. சிவபுண்ணியம், திமுக ஒன்றியச் செயலா் பால.ஞானவேல், தேமுதிக மாவட்டச் செயலா் பாலசுப்பிரமணியன், சிபிஐ ஒன்றியச் செயலா் எம்.செந்தில்நாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.