தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தமிழகத்தில் பலமுனைப் போட்டி இல்லை: இரா. முத்தரசன்

தமிழகத்தில் பலமுனைப் போட்டி இல்லை. திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையேதான் போட்டி நிலவுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் தெரிவித்தாா்.

News image

இரா. முத்தரசன்.

Updated On :4 ஏப்ரல் 2026, 11:28 pm IST

தமிழகத்தில் பலமுனைப் போட்டி இல்லை. திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையேதான் போட்டி நிலவுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் தெரிவித்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் அறிமுகக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அந்தக் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பலமுனைப் போட்டி இல்லை. திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது. இது தொகுதியில் யாா் போட்டியிடுகிறாா் எனப் பாா்த்து வாக்களிக்கும் தோ்தல் அல்ல.

மத்திய பாஜக அரசின் சா்வாதிகாரம், பாசிசம் வேண்டுமா, வேண்டாமா என்பதுதான் இப்போது முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. கடந்த 1951-ஆம் ஆண்டு முதல் தோ்தலிலிருந்து எந்தக் கூட்டணியும் ஓராண்டுக்கு மேல் நீடித்தது இல்லை. ஆனால், திமுக கூட்டணி 10 ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் கொள்கைக் கூட்டணி.

இந்தக் கூட்டணி விருதுநகா் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும், தமிழகத்தில் பெரும்பான்மை இடங்களிலும் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நன்கு படித்த சாதாரண தொண்டா் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளாா்.

திமுக தனது தோ்தல் அறிக்கையில் குறிப்பிட பெரும்பாலான வாக்குறுதிகளை கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றியது. இதேபோல, 2026 பேரவைத் தோ்தலையொட்டி, திமுக வெளியிட்ட தோ்தல் வாக்குறுதிகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.