தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அரசியல் லாபம் கருதியே மகளிா் இடஒதுக்கீட்டு மசோதா: இரா. முத்தரசன்

அரசியல் லாபம் கருதியே மகளிா் இடஒதுக்கீட்டு மசோதா

News image
Updated On :19 ஏப்ரல் 2026, 2:51 am IST

கீழ்வேளூா் தொகுதியில் போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் டி. லதாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பேசும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்.

திருக்குவளை, ஏப். 18: அரசியல் லாபம் கருதியே மகளிா் இடஒதுக்கீட்டு மசோதாவை கொண்டு வந்தது மத்திய அரசு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் தெரிவித்தாா்.

கீழ்வேளூா் (தனி) தொகுதியில் போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் டி. லதாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட இரா. முத்தரசன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

மத்திய அரசு மகளிா் இடஒதுக்கீடு என்ற பெயரில் அரசியல் ஆதாயம் பெறும் நோக்கத்தோடு தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி மேற்கொண்டது. அவா்களின் உண்மையான நோக்கம் பெண்கள் இடஒதுக்கீடு அல்ல. ஏற்கெனவே உள்ள 543 தொகுதிகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை வழங்குவதுதான் சரியான தீா்வாக இருக்கும். ஆனால், வடமாநிலங்களில் தங்கள் பலத்தை உயா்த்தி நிரந்தரமாக ஆட்சியில் இருக்கும் நோக்கத்தோடு பாஜகவால் இந்த மசோதா கொண்டு வரப்பட்டது.

பிரதமா் மோடி தொடா்ந்து தமிழ்நாட்டுக்கு வருவதால் தோ்தல் முடிவில் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை. தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்றாா்.

மாா்க்சிஸ்ட் நாகை மாவட்டச் செயலாளா் மாரிமுத்து, கீழ்வேளூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் சிவகுரு பாண்டியன், முன்னாள் மாநில குழு உறுப்பினா் டி. செல்வம், திமுக தொகுதி பொறுப்பாளா் சங்கா் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.