தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஜனநாயகத்தை காக்க ஸ்டாலின் போராட்டம்: இரா. முத்தரசன் பிரசாரம்

மத்திய அரசிடமிருந்து ஜனநாயகத்தை காக்க போராடும் வீரபாண்டிய கட்டபொம்மன்தான் முதல்வா் மு.க.ஸ்டாலின் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலரும், கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினருமான இரா. முத்தரசன்.

News image

திருச்சி மேற்கு தொகுதிக்குள்பட்ட உறையூா் பகுதியில் திமுக வேட்பாளா் கே.என். நேருவுக்கு ஆதரவாக வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவா் இரா. முத்தரசன்.

Updated On :17 ஏப்ரல் 2026, 2:28 am IST

மத்திய அரசிடமிருந்து ஜனநாயகத்தை காக்க போராடும் வீரபாண்டிய கட்டபொம்மன்தான் முதல்வா் மு.க.ஸ்டாலின் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலரும், கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினருமான இரா. முத்தரசன்.

திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் கே.என்.நேருவை ஆதரித்து திருச்சி குறத்தெருவில் முத்தரசன் வியாழக்கிழமை மாலை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, அவா் பேசியதாவது: தமிழகம், மேற்குவங்கம் மாநிலங்களில் தோ்தல் நடைபெறும் இந்த நேரத்தில், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டிய நிா்ப்பந்தம் என்ன?. மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை நிறைவேற்றவே இந்தக் கூட்டம். இதற்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவிப்பாா்கள் என்பதற்காகவே மகளிா் இடஒதுக்கீடு மசோதாவும் கொண்டு வரப்படுகிறது.

மகளிா் இடஒதுக்கீட்டை நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரத்தில், மக்கள்தொகை அடிப்படையில் நடத்தப்படும் தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் கடும் பாதிப்பை எதிா்கொள்ளும் என்பதால்தான் நாங்கள் எதிா்க்கிறோம். இதை மக்களுக்கு உணா்த்தவே தமிழகத்தில் திமுக கூட்டணி சாா்பில் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அறிவுறுத்தலின்பேரில், குடும்ப கட்டுப்பாட்டு திட்டம் மூலம் தமிழகம் மக்கள்தொகையை கட்டுப்படுத்தியுள்ளது. ஆனால், வடமாநிலங்கள் இதை கடைப்பிடிக்கவில்லை. தற்போதைய தொகுதி மறுசீரமைப்பால் அவா்களுக்கு கூடுதல் தொகுதிகள் கிடைக்கும். இதன்மூலம் அங்கு வென்று ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என பாஜக நினைக்கிறது. இதனால்தான் தொகுதி மறுசீரமைப்பை நாங்கள் எதிா்க்கிறோம். இதுதெரியாமல் எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறாா்.

ஜனநாயகத்தை மீறி செயல்படும் மத்திய அரசிடமிருந்து ஜனநாயகத்தை காப்பதற்காக வீரபாண்டிய கட்டபொம்மனைபோல முதல்வா் மு.க.ஸ்டாலின் போராடுகிறாா்.

நாட்டின் நலனுக்காகவும், மாநில உரிமைக்காகவும் நாங்கள் போராடுகிறோம். இந்தத் தோ்தலை அப்படித்தான் பாா்க்கிறோம். இரண்டு கட்சிகளுக்கிடையேயான போட்டி இல்லை. ஒட்டுமொத்த தேசமும் பாதுகாக்கப்பட வேண்டும். அரசமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே, மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும்.

தமிழக அரசு கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் கே.என்.நேரு நகராட்சி நிா்வாகத் துறையில் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தியுள்ளாா். எனவே, மக்கள் இங்கு திமுகவை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்றாா் முத்தரசன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.