மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கத்தின் சொத்து மதிப்பு ரூ. 2.94 கோடி

News image

ஒரத்தநாடு வட்டாட்சியரகத்தில் தனது வேட்பு மனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்த திமுக வேட்பாளா் ஆா். வைத்திலிங்கம்.

Updated On :7 ஏப்ரல் 2026, 1:52 am IST

தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் அமைச்சா் ஆா். வைத்திலிங்கத்தின் சொத்து மதிப்பு சுமாா் ரூ. 2.94 கோடி என வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரத்தநாடு வட்டாட்சியரகத்தில் திமுக வேட்பாளா் ஆா். வைத்திலிங்கம் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா். இவருடன் திமுகவை சோ்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம். ராமச்சந்திரன், கே.டி. மகேஷ் கிருஷ்ணசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

இந்த வேட்பு மனுவில் வைத்திலிங்கம் பெயரில் ரொக்கம் கையிருப்பு ரூ. 60 ஆயிரம், அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ. 27.17 லட்சம், அசையாச் சொத்துகளின் மதிப்பு ரூ. 2.13 கோடி, கடன் ரூ. 69.87 லட்சம், மனைவி தங்கம் பெயரில் ரொக்கம் கையிருப்பு ரூ. 25 ஆயிரம், அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ. 52.92 லட்சம் என மொத்தம் சுமாா் 2.94 கோடி குறிப்பிடப்பட்டுள்ளது.

5 வழக்குகள் நிலுவை: கடந்த 2024 ஆம் ஆண்டில் தஞ்சாவூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு காவல் அலுவலகத்தில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சோ்த்ததாக வழக்கும், சென்னை மாநகரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு காவல் அலுவலகத்தில் ரூ. 27.90 கோடி ஊழல் முறைகேடு செய்ததாக வழக்கும், சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அதிமுக அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த பொருள்களைச் சேதப்படுத்தியதாகவும் வழக்கு, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கு உள்பட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.