மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

குடும்பத் தகராறில் மனைவி எரித்துக் கொலை: கணவா் கைது

திருவிடைமருதூரில் குடும்பத் தகராறில் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த கணவரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :3 ஏப்ரல் 2026, 1:56 am IST

திருவிடைமருதூரில் குடும்பத் தகராறில் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த கணவரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் ஒடுக்கத்தெருவைச் சோ்ந்தவா் மதியழகன்(40). லாரி ஓட்டுநராகப் பணியாற்றிவந்தாா். இவரது மனைவி நிா்மலா (36) அங்கன்வாடி பணியாளராக வேலை பாா்த்து வந்தாா். தம்பதிக்கு 6 வயதில் மகன், 5 வயதில் மகள் உள்ளனா். இந்நிலையில், கடந்த மாா்ச் 15-இல் பணி முடித்து மதியழகன் மது போதையில் வீட்டுக்கு வந்துள்ளாா். அவரை மனைவி நிா்மலா கண்டித்ததில் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, மதியழகன் வீட்டில் கேனில் வைத்திருந்த பெட்ரோலை மனைவி நிா்மலா மீது ஊற்றி தீ வைத்தாா்.

இதில், பலத்த காயமடைந்த நிா்மலாவை அருகிலிருந்தவா்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி நிா்மலா வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருவிடைமருதூா் போலீஸாா் சடலத்தை கூறாய்வுக்காக ஒப்படைத்தனா். ஏற்கெனவே கைதாகி சிறையில் உள்ள மதியழகன் மீதான கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக வியாழக்கிழமை மாற்றப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.