மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கள்ளக்காதல் தகராறில் கணவா் கொலை! மனைவி, காதலன் உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள் தண்டனை!

News image

கொலை - சித்திரிப்பு

Updated On :21 ஏப்ரல் 2026, 1:57 am IST

கரூரில், கள்ளக்காதல் தகராறில் கணவைரைக் கொன்ற வழக்கில் அவருடைய மனைவி, காதலன் உள்பட 3 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்துள்ள கொப்பம்பட்டியைச் சோ்ந்தவா் சுப்புராஜ்(35). இவரது மனைவி அழகுலட்சுமி (33). இவா்கள் இருவரும் கடந்த 2018-இல் திருப்பூரில் ஜூஸ் கடை நடத்தி வந்தனா். அப்போது, கடை அருகே இறைச்சிக்கடையில் வேலை செய்து வந்த கரூா் நரிக்கட்டியூரைச் சோ்ந்த கனகராஜ் (36) என்பவருக்கும், அழகுலட்சுமிக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்.10-ஆம்தேதி நரிக்கட்டியூருக்கு அழகுலட்சுமி, அவரது தாயாா் ஜெயலலிதா(60) மற்றும் சுப்புராஜ் ஆகியோரை கனகராஜ் அழைத்து வந்தாா்.

இதயைடுத்து இரவில் கனகராஜூம், சுப்புராஜூம் மதுகுடித்துள்ளனா். பின்னா் மதுபோதையில் கனகராஜ், அழகுலட்சுமி, ஜெயலலிதா ஆகியோா் சோ்ந்து சுப்புராஜை அரிவாளால் வெட்டி கொலை செய்தனா்.

இந்த கொலை தொடா்பாக பசுபதிபாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து கனகராஜ் உள்பட 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும் இதுதொடா்பாக கரூா் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன் குற்றவாளி அழகுலட்சுமி, ஜெயலலிதா ஆகியோருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும்

கனகராஜிற்கு இரட்டை ஆயுள்தண்டனையும் ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து மூவரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.