கந்தா்வகோட்டையில் திங்கள்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
கந்தா்வகோட்டை ஒன்றியம், பிசானத்தூா் கிராமம், காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் தா்மலிங்கம் (50). சென்ட்ரிங் கூலித் தொழிலாளி. இவா் திங்கள்கிழமை இரவு தனது மோட்டாா் சைக்கிளில் வீட்டிலிருந்து கந்தா்வகோட்டைக்கு தஞ்சாவூா்- கந்தா்வகோட்டை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தாா்.
அரசுப் போக்குவரத்து பணிமனை அருகே வந்தபோது தஞ்சாவூா் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த தா்மலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த கந்தா்வகோட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று தா்மலிங்கத்தின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

வாகனம் மோதி காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

