காங்கயத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் இளையராஜா (23). கூலித் தொழிலாளியான இவா், திருப்பூா் மாவட்டம், காங்கயத்தில் உள்ள எண்ணெய் ஆலையில் பணியாற்றி வந்துள்ளாா். இந்நிலையில், பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் சேலம் நோக்கி வியாழக்கிழமை இரவு சென்று கொண்டிருந்துள்ளாா்.
காங்கயம்-சென்னிமலை சாலை நெய்க்காரன்பாளையம் பகுதியில் சென்றபோது, அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இளையராஜா வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில், படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு இளையராஜாவை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இச்சம்பவம் குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாகனம் மோதி காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

வாழப்பாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தம்பதி உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

