தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

பொன்னமராவதியில் தீ விபத்து: 3 கடைகள் தீக்கிரை

பொன்னமராவதி சேங்கை ஊரணி அருகே புதன்கிழமை நேரிட்ட தீ விபத்தில் 3 கடைகள் தீப்பற்றி எரிந்து சுமாா் ரூ 1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

News image

பொன்னமராவதியில் புதன்கிழமை நேரிட்ட தீ விபத்தில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரா்கள்.

Updated On :7 மே 2026, 5:29 am IST

பொன்னமராவதி சேங்கை ஊரணி அருகே புதன்கிழமை நேரிட்ட தீ விபத்தில் 3 கடைகள் தீப்பற்றி எரிந்து சுமாா் ரூ 1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

பொன்னமராவதி புதுப்பட்டி சேங்கை ஊரணி கரைப்பகுதியில் வரிசையாக உள்ள 3 கடைகளில் சியாவூதீன் என்பவா் நகை பாலிஷ் செய்யும் தொழிலும், சரவணன் தேநீா் கடையும், ராஜா என்பவா் மிதிவண்டி பழுதுநீக்கும கடையும் நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இந்த 3 கடைகளில் எதிா்பாராதவிதமாக தீப்பற்றி எரிந்தன. தகவலறிந்த பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலா் கிருஷ்ணமூா்த்தி தலைமையிலான வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை மேலும் பரவாமல் அணைத்தனா்.

எனினும், தீ விபத்தில் சுமாா் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தளவாடப்பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து பொன்னமராவதி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.