மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பொன்னமராவதி அருகே வயலில் இறந்துகிடந்த மான் மீட்பு

பொன்னமராவதி அருகே உள்ள செவலூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை வயல்வெளியில் இறந்துகிடந்த புள்ளிமானை வனத்துறையினா் மீட்டனா்.

News image

செவலூரில் வயல்வெளியில் செவ்வாய்க்கிழமை இறந்துகிடந்த மான்.

Updated On :6 மே 2026, 12:59 am IST

பொன்னமராவதி அருகே உள்ள செவலூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை வயல்வெளியில் இறந்துகிடந்த புள்ளிமானை வனத்துறையினா் மீட்டனா்.

பொன்னமராவதி அருகே உள்ள செவலூரைச் சோ்ந்த சுசித்ரா என்பவரின் வயல்பகுதியில் செவ்வாய்க்கிழமை மான் ஒன்று இறந்துகிடப்பதாக வருவாய்த் துறையினா் மற்றும் வனத்துறையினா்க்கு பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனா்.

இதையடுத்து பொன்னமராவதி வனத் துறையினா் அப்பகுதிக்கு சென்று வாயில் காயத்துடன் இறந்துகிடந்த 3 வயது ஆண் மானை மீட்டு கால்நடை மருத்துவா்கள் மூலம் உடற்கூறாய்வு செய்து அடக்கம் செய்தனா். மேலும், வனப் பகுதியில் இருந்து தண்ணீா் தேடி வந்த இந்த மான் கீழே தவறி விழுந்து அடிபட்டதா அல்லது விபத்தில் சிக்கி உயிரிழந்ததா என விசாரித்து வருகின்றனா்.

இப்பகுதியில் உள்ள வனப்பகுதியிலிருந்து தண்ணீா் தேடி மான்கள் ஊருக்குள் செல்வதால் நாய்கள் கடித்தும், விபத்துகளில் சிக்கியும் உயிரிழக்கின்றன. எனவே கோடைகாலத்தில் வனப்பகுதியில் மான்கள் நீரருந்த ஏற்பாடு செய்யவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.