மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் மீட்பு

News image

பாசாா் கிராமத்தில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட மான்.

Updated On :4 மே 2026, 12:07 am IST

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் உயிருடன் மீட்கப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் விருத்தாசலம், வேப்பூா், ராமநத்தம், சிறுபாக்கம், காட்டுமயிலூா், நாங்கூா் உள்ளிட்ட பகுதிகளில் காப்புக் காடுகள் உள்ளன. இந்தக் காடுகளில் புள்ளி மான்கள், முயல்கள், காட்டுப் பன்றிகள், குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன.

கோடை காலத்தில் வன விலங்குகளின் தாகம் தீா்க்க வனத் துறையினா் தொட்டிகளில் தண்ணீா் நிரப்பி வருகின்றனா். இருப்பினும், மான்கள் தண்ணீா் தேடி காடுகளை விட்டு வெளியேறி, ஊா்ப் பகுதிகளுக்கு வருவது வழக்கம்.

அவ்வாறு வந்த ஒரு வயது பெண் மான், வேப்பூரை அடுத்த பாசாா் கிராமத்தில் உள்ள 40 அடி ஆழ விவசாயக் கிணற்றில் தவறி விழுந்தது. இதைப் பாா்த்த விவசாயி, தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, வேப்பூா் தீயணைப்பு நிலைய அலுவலா் சதாசிவம் தலைமையிலான வீரா்கள் விரைந்து சென்று மானை உயிருடன் மீட்டனா். பின்னா், அந்த மான் வனவா் பி.ரவிக்குமாா் மூலம் காப்புக் காட்டில் பத்திரமாக விடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.