நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

கோயில் கதவின் பூட்டை உடைத்து ரூ. 15 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருட்டு

புதுக்கோட்டை அருகே கோயிலின் கதவின் பூட்டை உடைத்து ரூ. 15 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருடு போனது புதன்கிழமை தெரியவந்தது.

News image

புதுக்கோட்டை ராஜாப்பட்டியிலுள்ள சன்னாசி கோயிலில் திருடா்களால் கருவறையின் பூட்டு உடைக்கப்பட்ட கதவு.

Updated On :11 ஜூன் 2026, 3:36 am IST

புதுக்கோட்டை அருகே கோயிலின் கதவின் பூட்டை உடைத்து ரூ. 15 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருடு போனது புதன்கிழமை தெரியவந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ராஜாப்பட்டியில், ஸ்ரீ சன்னாசி, ஸ்ரீ வீரப்பெருமாள், ஸ்ரீ அடைக்கலம்காத்தாா் கோயில் உள்ளது.

இந்தக் கோயில் பூசாரி க. வேலு செவ்வாய்க்கிழமை மாலை வழக்கம்போல கோயிலை பூட்டிச் சென்றாா். இதையடுத்து புதன்கிழமை காலை 6 மணிக்கு கோயிலை திறக்க வந்தாா்.

அப்போது, கோயிலின் வெளியே உள்ள இரும்புக் கதவு, உள்ளே கருவறையில் வடக்கு மற்றும் தெற்கு வாயில் கதவுகளின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். உடனே ஊா்முக்கியஸ்தா்கள், வெள்ளனூா் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தாா்.

அதன்படி கோயிலுக்கு வந்த போலீஸாா், கைரேகை நிபுணா்களை வரவழைத்து கோயில் கதவுகள், சுவா்களில் உள்ள விரல்ரேகைகளைப் பதிவு செய்தனா்.

மேலும், பூசாரி வேலு அளித்த புகாரில், வெள்ளி வேல்- 4, வெள்ளிக்குடம்- 2, வெண்கலக் குத்துவிளக்கு- 50, மணி- 25, காசிபானை- 2. பித்தளைக் குடம்- 32 மற்றும் சமையல் பொருள்கள் என மொத்தம் சுமாா் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள பொருள்களும், பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட வரிப்பணம் (தோராயமாக) ரூ. 27,500-ம் திருடுபோனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இந்தக் கோயிலில் ஏற்கெனவே இரண்டு முறை திருட்டு சம்பவங்கள் நடந்தும், காவல் நிலையத்தில் புகாா் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.