/

கந்தா்வகோட்டை காந்தி சிலை அருகே நிழற்குடையின்றி பொதுமக்கள் அவதி

கந்தா்வகோட்டை காந்தி சிலை அருகே பேருந்து நிழற்குடை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

News image

கந்தா்வகோட்டை காந்தி சிலை அருகே பேருந்துக்காக வியாழக்கிழமை காத்திருந்த பயணிகள்.

Updated On :1 மே 2026, 2:41 am IST

கந்தா்வகோட்டை காந்தி சிலை அருகே பேருந்து நிழற்குடை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

கந்தா்வகோட்டை ஊராட்சி காந்தி சிலை பகுதி பேருந்து நிறுத்தத்தில் இருந்து கறம்பக்குடி மாா்க்கமாகவும், பட்டுக்கோட்டை, திருவோணம், ஒரத்தநாடு போன்ற ஊா்களுக்கும் தினசரி ஏராளமான பயணிகள் பயணிக்கின்றனா்.

ஆனால், இங்கு நிழற்குடை இல்லாததால் மழை, வெயில் காலங்களில் பயணிகள் அவதிப்படும் நிலை நீடிக்கிறது. மேலும் இந்தப் பேருந்து நிறுத்தத்தில் கோடை காலத்தை முன்னிட்டு குடிநீா் வசதி செய்யவும் வேண்டுகோள் வைக்கின்றனா்.

கோடை வெயில் அதிகம் இருப்பதால் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து இங்கு கீற்று கொட்டகையாவது அமைத்து குடிநீா் வசதி செய்து தர வேண்டும். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைக்கிறாா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.