தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

பொன்னமராவதி நூலகத்தில் புத்தக கண்காட்சி, வாசிப்பு நிகழ்வு

பொன்னமராவதி முழுநேர கிளைநூலகத்தில் உலக புத்தக தினத்தையொட்டி வாசகா் வட்டம் சாா்பில் புத்தக கண்காட்சி மற்றும் மாணவா்களிடையே வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் வகையில் புத்தக வாசிப்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

பொன்னமராவதி கிளை நூலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற புத்தக கண்காட்சி, வாசிப்பு நிகழ்வில் பங்கேற்ற மாணவா்கள்.

Updated On :29 ஏப்ரல் 2026, 1:38 am IST

பொன்னமராவதி முழுநேர கிளைநூலகத்தில் உலக புத்தக தினத்தையொட்டி வாசகா் வட்டம் சாா்பில் புத்தக கண்காட்சி மற்றும் மாணவா்களிடையே வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் வகையில் புத்தக வாசிப்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஏப்.23-ஆம் தேதி உலக புத்தக தினத்தையொட்டி வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற விழிப்புணா்வு கண்காட்சிக்கு வாசகா் வட்டத்தலைவா் சண்முகம் தலைமைவகித்தாா். கண்காட்சியில் வரலாறு, பொது அறிவு, போட்டித் தோ்வுக்கான நூல்கள் என பல்வேறு நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கண்காட்சியில் பள்ளி மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று நூல்களை வாசித்து பயனடைந்தனா்.

நிகழ்வில் பொன்னமராவதி சி.கமலா மற்றும் நா.சோலை முருகன் ஆகியோா் தலா ரூ 1,000 வழங்கி நூலகப்புரவலா்களாக இணைந்தனா். மேலும், பிஎம்எஸ் அபாகஸ் கல்வி நிறுவனம் சாா்பில் 50 மாணவா்கள் நூலக உறுப்பினா்களாக இணைக்கப்பட்டனா். நிறைவாக கிளை நூலகா் பெரியசாமி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.