மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திமுக கூட்டணிதான் முதலிடம் பிடிக்கும்: எஸ். ரகுபதி

பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணிதான் முதலிடம் பிடிக்கும். இரண்டாவது இடத்துக்குத்தான் போட்டியே என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சருமான எஸ். ரகுபதி.

News image

புதுக்கோட்டை மாநகரில் உள்ள ராணியாா் அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியில் வாக்களித்த மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சரும், திருமயம் தொகுதி திமுக வேட்பாளருமான எஸ். ரகுபதி,

Updated On :24 ஏப்ரல் 2026, 4:04 am IST

பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணிதான் முதலிடம் பிடிக்கும். இரண்டாவது இடத்துக்குத்தான் போட்டியே என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சருமான எஸ். ரகுபதி.

புதுக்கோட்டை நகரிலுள்ள ராணியாா் உயா்நிலைப் பள்ளியில் வாக்களித்துவிட்டு அவா் அளித்த பேட்டி: தோ்தல் ஆணையம் ஒரு கட்சியுடைய கூட்டணியாகவே செயல்படுகிறது. மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். எங்களுக்கு களம் நன்றாக இருக்கிறது. 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெறும்.

இளம் வாக்காளா்களை கவரும் வகையில் நாங்கள் அவா்களை நாடி பிரசாரம் மேற்கொண்டுள்ளோம். என்னென்ன நன்மைகள் எல்லாம் செய்தோம் என்று சொல்லி உள்ளோம்.

கேரவனிலிருந்து அரை மணி நேரம் வெளியே வந்துவிட்டு இண்டு மணி நேரம் வெயிலில் நிற்கக்கூட முடியாத ஒருவா் மக்களுக்காக களப்பணி ஆற்றுவாா் என்று எண்ணுவது தவறான ஒன்று.

எங்களது முதல்வா் களப்பணியில் சிறந்தவா். களப்பணி ஆற்றக்கூடிய வல்லவா். அதுபோல் உதயநிதி ஸ்டாலினும் களப்பணி ஆற்ற கூடியவா். அதிகமான களப்பணி ஆற்றக் கூடியவா்கள் தான் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உள்ளவா்கள்.

எடப்பாடி பழனிசாமியைப் பொருத்தவரை அவா் செல்வாக்கை என்றைக்கோ இழந்து விட்டாா். பத்து தோ்தலில் தோல்வியை சந்தித்து விட்டாா். பதினோராவது தோல்வியைச் சந்திக்கத் தயாராக இருக்கிறாா்.

களத்தைப் பொறுத்தவரை முதல் இடத்தில் நாங்கள் இருக்கின்றோம். இரண்டாவது இடத்திற்கு தான் போட்டியே. இரண்டாவது இடத்தில் யாா் வேண்டுமானாலும் வந்து விட்டுப் போகட்டும் என்றாா் ரகுபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.