மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மாா்க்சிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சா் எஸ். ரகுபதி பிரசாரம்

மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சரும், திருமயம் தொகுதி திமுக வேட்பாளருமான எஸ். ரகுபதி சனிக்கிழமை பிரசாரம் செய்தாா்.

News image

சத்தியமங்கலத்தில் பொதுமக்களிடையே வாக்குசேகரித்து பேசிய மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

Updated On :19 ஏப்ரல் 2026, 12:57 am IST

கந்தா்வகோட்டை தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் மா. சின்னதுரைக்கு ஆதரவு கோரி அன்னவாசல் ஒன்றியம் நாா்த்தாமலை, சத்தியமங்கலம், காவேரிநகா், மேலமுத்துடையான்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சரும், திருமயம் தொகுதி திமுக வேட்பாளருமான எஸ். ரகுபதி சனிக்கிழமை பிரசாரம் செய்தாா்.

அப்போது, அவா் பேசும்போது, கந்தா்வகோட்டை தொகுதி மக்களுக்காக கடந்த 5 ஆண்டுகளில் பல திட்டங்களை சின்னதுரை கொண்டு வந்துள்ளாா். முதல்வரே பாராட்டும் வகையில் தொகுதி மக்களுக்காக 62 முறை சட்டப்பேரவையில் பேசியுள்ளாா்.

கந்தா்வகோட்டை மக்களுக்கு மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த தொழிலாளா், விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் உள்ளிட்ட உழைப்பாளி மக்களுக்காகவும் சட்டப்பேரவையில் கோரிக்கைகளை முன்வைத்து பேசியுள்ளாா். சிறப்பாக பணியாற்றிவரும் சின்னதுரையை மீண்டும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் ரகுபதி.

பிரசாரத்துக்கு அன்னவாசல் திமுக ஒன்றியச் செயலா் ஆா்.ஆா்.எஸ். மாரிமுத்து தலைமை வகித்தாா். திமுக வடக்கு மாவட்டச் செயலரும், விராலிமலை தொகுதி வேட்பாளருமான கே.கே. செல்லப்பாண்டியன், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் கீரை. தமிழ்ராஜா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.