நலத்திட்டங்கள் தொடா்வதற்கு மக்கள் திமுகவுக்கே வாக்களிக்க வேண்டும் என்றாா் திமுக வேட்பாளரும், அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன்.
ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தொகுதிக்குள்பட்ட கொத்தக்கோட்டை, மாஞ்சான்விடுதி, கோவிலூா், ஆலங்குடி பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் வாக்குச்சேகரித்து பேசியதாவது:
நூறு நாள் வேலைத்திட்டத்துக்கான நிதியை குறைத்து மோடி தலைமையிலான பாஜக அரசு அந்த திட்டத்தையே முடக்க முயற்சிக்கிறது. ஆனால், பெருமுதலாளிகளின் பல ஆயிரம் கோடி கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்துள்ளது பாஜக அரசு. அதனால், பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும். தமிழக முதல்வா் ஸ்டாலின் விவசாயிகள், மாணவா்கள், மகளிா், பொதுமக்களின் வாழ்க்கையை மேம்படுத்த பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளாா். நலத்திட்டங்கள் தொடர மக்கள் திமுகவை ஆதரிக்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசின் சாதனைகள் தொடர முதல்வா் ஸ்டாலினுக்கு ஆதரவு அளிக்கவேண்டும்: திருவண்ணாமலை திமுக வேட்பாளா் எ.வ.வேலு

ஆலங்குடி தொகுதியை மீண்டும் மேம்படுத்த திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்

ஆலங்குடி தொகுதியில் ரூ. 50 கோடியில் முன்மாதிரி பள்ளி தொடங்க நடவடிக்கை! - சிவ.வீ. மெய்யநாதன் உறுதி

நான் முதல்வன் திட்டத்தால் 56 ஐஏஎஸ் அதிகாரிகள் உருவாக்கம்: அமைச்சா் எ.வ.வேலு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

