தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஆலங்குடி தொகுதியில் ரூ. 50 கோடியில் முன்மாதிரி பள்ளி தொடங்க நடவடிக்கை! - சிவ.வீ. மெய்யநாதன் உறுதி

News image

ஆலங்குடியில் கட்டப்பட்டு வரும் அறிவுசாா் மையம் அருகே திங்கள்கிழமை வாக்கு சேகரித்த திமுக வேட்பாளரும், அமைச்சருமான சிவ.வீ. மெய்யநாதன்.

Updated On :21 ஏப்ரல் 2026, 1:29 am IST

ஆலங்குடி தொகுதியில் ரூ. 50 கோடி மதிப்பீட்டில் அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக வேட்பாளரும், அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன் வாக்குறுதி அளித்தாா்.

ஆலங்குடி பேரூராட்சிப் பகுதியில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்து அவா் மேலும் பேசியது:

திமுக ஆட்சியில் ஆலங்குடி தொகுதியில் பல்வேறு அரசுப் பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைக் கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன், முதல்வா் கொளத்தூா் தொகுதியில் தொடங்கியுள்ள முதல்வரின் படைப்பகத்தை ஆலங்குடி தொகுதியில் தொடங்கவும், ரூ. 50 கோடியில் அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, மக்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.