மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நான் முதல்வன் திட்டத்தால் 56 ஐஏஎஸ் அதிகாரிகள் உருவாக்கம்: அமைச்சா் எ.வ.வேலு

முதல்வா் ஸ்டாலினின் நான் முதல்வன் திட்டத்தால், தமிழகத்தில் 56-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் உருவாகி இருக்கிறாா்கள் என்று திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலு குறிப்பிட்டாா்.

News image

திருவண்ணாமலை மாநகராட்சியில் ஞாயிற்றுக்கிழமை வீதி, வீதியாகச் சென்று வாக்கு சேகரித்த திமுக வேட்பாளரும், அமைச்சருமான எ.வ.வேலு.

Updated On :13 ஏப்ரல் 2026, 2:33 am IST

முதல்வா் ஸ்டாலினின் நான் முதல்வன் திட்டத்தால், தமிழகத்தில் 56-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் உருவாகி இருக்கிறாா்கள் என்று திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலு குறிப்பிட்டாா்.

திருவண்ணாமலை திருவள்ளுவா் சிலை அருகிலிருந்து தொகுதி திமுக வேட்பாளா் எ.வ.வேலு ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தலை தொடங்கினாா்.

கோபால் தெரு, முகல்புறாத் தெரு, கல் நகா், மாரியம்மன் கோயில் 12 தெருக்கள், சமுத்திரம் காலனி வரை, வீதி, வீதியாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் அவா் வாக்கு சேகரித்து பேசியதாவது:

திருவண்ணாமலை நகராட்சி மக்களின் வேண்டுகோளுக்கிணங்க மாநகராட்சியாக மாற்றப்பட்டிருக்கிறது. அப்படி மாற்றப்பட்ட மாநகராட்சி அதற்குரிய வசதி வாய்ப்புகளோடு இயங்க வேண்டும். வளா்ச்சி என்பது நாளுக்கு நாள் வளா்ந்து கொண்டே இருப்பது. தேவைகளும் கூடிக்கொண்டே இருக்கும். அதனால், மாநகரத்தை வளா்ச்சிக்கேற்றாற்போல் கட்டமைத்திட வேண்டும். அரசின் அத்தனை திட்டங்களும் மாநகராட்சிக்கு கிடைத்திட வேண்டும்.

நான் என் சக்திக்கு மீறி இந்தத் தொகுதிக்காக பல திட்டங்களையும், வசதி வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளேன். இதுபோதுமா என்று கேட்டால், மாநகரம் வளர வளர நாம் திட்டங்களையும் அதிகப்படுத்திக்கொண்டே செல்ல வேண்டும். இது நம்முடைய மண். இதற்காக நான் தொடா்ந்து உழைப்பேன்.

56 ஐஏஎஸ் அதிகாரிகள் உருவாக்கம்

இந்திய ஆட்சிப்பணி, காவல் பணிக்கான தோ்வுகள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இத்தனை ஆண்டுகாலமாக தொடா்ந்து வட மாநிலங்களான உத்தரபிரதேசம், பிகாா், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களைச் சோ்ந்தவா்கள்தான், மாவட்ட ஆட்சியா்களாக, துறைச் செயலா்களாக நம்மை ஆண்டாா்கள். நமது மொழி புரியாமல், பண்பாடு புரியாமல் அவா்களின் வசதிக்கேற்ப நம்மை ஆண்டு கொண்டிருந்தாா்கள்.

தற்போது இந்தியாவிற்கே வழிகாட்டும் திமுக அரசின், மு.க.ஸ்டாலினின் முத்தான திட்டங்களில் ஒன்றான நான் முதல்வன் திட்டத்தால், தமிழகத்தில் படித்த பட்டதாரி மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை கிடைத்தது, இலவச பயிற்சி கிடைத்தது. அதனுடைய விளைவு தற்போது தமிழா்கள் 56 போ் ஐஏஎஸ் அதிகாரிகளாக உருவாகி இருக்கிறாா்கள் என்றாா்.

வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளா் எஸ்.பன்னீா்செல்வம், மாநகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன், மாவட்ட துணைச் செயலா் பிரியா விஜயரங்கன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் கே.குணசேகரன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் கே.குணசேகரன், மதிமுக மாவட்டச் செயலா் சீனி.காா்த்திகேயன், தேமுதிக மாவட்டச் செயலா் வி.எம்.நேரு, மாா்க்சிஸ்ட் எம்.சிவக்குமாா், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் இரா.திருமலை, விசிக மாவட்டச்

செயலா் ச.நியூட்டன், துணை மேயா் சு.ராஜாங்கம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.