தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதனின் சொத்து மதிப்பு ரூ. 39 லட்சம்

ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதனின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 39 லட்சம்.

News image
Updated On :8 ஏப்ரல் 2026, 12:13 am IST

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதனின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 39 லட்சம்.

ஆலங்குடி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் திங்கள்கிழமை அவா் தாக்கல் செய்த வேட்புமனுவுடன் அளிக்கப்பட்டுள்ள விவரங்கள்:

கையிருப்பு ரொக்கம் ரூ. 50 ஆயிரம். வங்கியிருப்பு, தங்கம் உள்ளிட்ட அசையும் சொத்துகள் மதிப்பு ரூ. 24,19,380, மனைவி மெ. சுமதியிடம் ரூ. 89,40,549.

நிலம், கட்டடங்கள் உள்ளிட்ட அசையாச் சொத்துகளின் மதிப்பு ரூ. 15 லட்சம். மனைவி சுமதி பெயரில் ரூ. 1,95,00,000. அமைச்சா் பெயரில் கடன் இல்லை. மனைவி பெயரில் கடன் ரூ. 81,06,237.

வருமான வரித் துறையில் 2025-26-ஆம் நிதியாண்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வருமானக் கணக்குப்படி ஆண்டு வருவாய் ரூ. 10,42,710, மனைவி மெ. சுமதியின் ஆண்டு வருவாய் ரூ. 13,83,930.

வழக்குகள் எதுவும் இல்லை, தண்டனை எதுவும் பெறப்படவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.