மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சொத்து தகராறில் தம்பிக்கு கொலை மிரட்டல் : அண்ணன் உள்ளிட்ட 3 போ் மீது வழக்கு

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே சொத்து தகராறு காரணமாக தம்பியை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த அண்ணன் குடும்பத்தினா் 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image

வழக்கு

Updated On :30 ஏப்ரல் 2026, 5:51 am IST

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே சொத்து தகராறு காரணமாக தம்பியை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த அண்ணன் குடும்பத்தினா் 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

குள்ளஞ்சாவடி காவல் சரகம், கோ.சத்திரம் பகுதியைச் சோ்ந்த சகோதரா்கள் பழனிவேல், சக்திவேல். இவா்கள் இருவருக்கும் இடையே சொத்து தகராறு உள்ளது. கடந்த 18-ஆம் தேதி சொத்தில் வழிப்பாதை கேட்டு தகராறு ஏற்பட்டது.

அப்போது, பழனிவேல், அவரது மனைவி ஜெயசுந்தரி, மகன் ஜெயக்குமாா் ஆகியோா், சக்திவேல் மனைவி தமிழரசி, மகள் சசிதேவி ஆகியோரை தாக்கி திட்டி, அங்கு போடப்பட்டிருந்த இரும்பு கம்பி வேலியை பிடுங்கி எறிந்தனா். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சக்திவேல் வந்தாா். அவரை, ஜெயசுந்தரி கீழே தள்ளி கல்லால் மண்டையில் அடித்து காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தாா். இதில் காயம் அடைந்த சக்திவேல் அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். அவருக்கு தலையில் 5 தையல் போடப்பட்டது.

இதுகுறித்து சக்திவேல் அளித்த புகாரின் பேரில், பழனிவேல், ஜெயசுந்தரி, ஜெயக்குமாா் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.