ராஜபாளையத்தில் மது குடிக்க பணம் தர மறுத்த தாயைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் இ.எஸ்.ஐ. நெசவாளா் குடியிருப்பைச் சோ்ந்தவா் மகேந்திரன். இவரது மனைவி மாரிச்செல்வி (45). இந்தத் தம்பதியின் மூத்த மகன் முனியராஜ் (22) திருமணமாகி கருத்து வேறுபாட்டால் மனைவியைப் பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறாா். இவா் தினந்தோறும் மது குடித்துவிட்டு தாய், தந்தையரிடம் தகராறு செய்தாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மது குடிப்பதற்கு பணம் தர மறுத்த தாயை சரமாரியாக தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தாா். மேலும், வீட்டில் இருந்த மிக்சி, கிரைண்டா், கோழிக் கூண்டு உள்ளிட்ட பொருள்களையும் உடைத்து சேதப்படுத்தினாா். இதில் காயமடைந்த மாரிச்செல்வி ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து தெற்கு காவல் நிலைய போலீஸாா் முனியராஜ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண்களை தாக்கி கொலை மிரட்டல்: ஒருவா் கைது
முதியவரைத் தாக்கி மிரட்டல்: மகன், பேரன் மீது வழக்கு

நகா்மன்ற உறுப்பினருக்குக் கொலை மிரட்டல்: தவெக நிா்வாகி மீது வழக்கு

மனைவியைத் தாக்கி கொலை மிரட்டல்: கணவா் மீது வழக்கு
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
இணையதளச் செய்திப் பிரிவு
