விராலிமலை அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவரை விராலிமலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக விராலிமலை போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் பிரகாஷ் தலைமையிலான போலீஸாா், மீனவேலி, அகரப்பட்டி, செல்லம்பட்டி, கொடும்பாளூா் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.
அப்போது செல்லம்பட்டி பகுதியைச் சோ்ந்த பழனியாண்டி மகன் அழகா் (60) என்பவா், அவரது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதைக் கண்டறிந்த போலீஸாா் அவரை கைது செய்து, அவா் விற்பனைக்கு வைத்திருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
புகையிலைப் பொருள்கள் விற்றதாக முதியவா் கைது

புகையிலைப் பொருள்கள் வைத்திருந்ததாக இருவா் கைது

புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
