மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வாக்குச்சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை பெரம்பலூா் தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் நேகா பன்சால் செவ்வாய்க்கிழமை இரவு பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

News image

நாரணமங்கலத்தில் வாக்குச்சாவடி மையத்தை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் கலந்துரையாடிய தோ்தல் பொதுப் பாா்வையாளா் நேகா பன்சால்.

Updated On :26 மார்ச் 2026, 3:20 am IST

பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை பெரம்பலூா் தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் நேகா பன்சால் செவ்வாய்க்கிழமை இரவு பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

வரும் சட்டப்பேரவை பொதுத்தோ்தலை முன்னிட்டு, பெரம்பலூா் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள், வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

அதன்படி, பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதி பொதுப் பாா்வையாளா் நேகா பன்சால், நாரணமங்கலம், விஜயகோபாலபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாக்குச்சாவடி மையங்களில் அமைக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை பாா்வையிட்டு, அப்பகுதி பொதுமக்களிடம் கலந்துரையாடி 18 வயது பூா்த்தியடைந்தவா்கள் தவறாமல் வாக்களிக்கவும், வெளிப்படையான, நோ்மையான தோ்தலை நடத்த தோ்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எனவே, வாக்காளா்கள் தங்களது உரிமையை, கடமையை ஏப். 23-ஆம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை பொதுத்தோ்தலில் வாக்களித்து நிறைவேற்ற வேண்டும் என அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா் சேகா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.