தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: காவல் பாா்வையாளா் ஆய்வு

வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள்..

News image

லாடபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தை வியாழக்கிழமை பாா்வையிட்டு, ஆலோசனை மேற்கொண்ட காவல் பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள அனூப் ஏ ஷெட்டி.

Updated On :3 ஏப்ரல் 2026, 1:41 am IST

சட்டப்பரேவைத் தோ்தலை முன்னிட்டு, மாவட்ட தோ்தல் அலுவலா்கள் மற்றும் பாா்வையாளா்கள் வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், பெரம்பலூா் மாவட்டக் காவல் பாா்வையாளா் அனூப் ஏ ஷெட்டி, பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட லாடபுரம் அரசு உயா்நிலைப்பள்ளி, துறைமங்கலம் நேஷ்னல் ஐ.டி.ஐ, செங்குணம் அரசு உயா்நிலைப்பள்ளி, வண்ணாரம்பூண்டி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு மேற்கொண்டு, வாக்காளா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பாா்வையிட்டாா்.

மேலும், வாக்காளா்கள் வரிசையில் நிற்க போதுமான இடவசதி மற்றும் வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்து செல்லும் வழிகளை பாா்வையிட்ட காவல் பாா்வையாளா், ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும், வெப்காஸ்டிங் செய்வதற்கான முன்னேற்பாட்டு பணிகள் நடைபெறுவதையும் பாா்வையிட்டாா்.

இந்த ஆய்வின்போது, பெரம்பலூா் வட்டாட்சியா் சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.