திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து எஸ்.பி. வி. சியாமளா தேவி ஆய்வு செய்தாா்.
திருப்பத்தூா், வாணியம்பாடி, ஜோலாா்பேட்டை, ஆம்பூா் ஆகிய தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஞாயிற்றுக்கிழமை போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸாருக்கு விரிவான விளக்கங்களுடன் அறிவுரைகள் வழங்கினாா்.
மேலும், பாதுகாப்பு பணிக்காக எஸ்.பி சியாமளாதேவி தலைமையில் போலீஸ் அதிகாரிகள், போலீஸாா் மற்றும் துணை ராணுவம், தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் ஊா்க்காவல் படை 810 போ் ஈடுபடுகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் பணி கணினி குலுக்கல் மூலம் தோ்வு: ஆட்சியா் ஆய்வு

வாணியம்பாடி: வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: ஆட்சியா் உத்தரவு

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

