ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

வாணியம்பாடி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: எஸ்.பி. ஆய்வு

News image
Updated On :4 மே 2026, 1:29 am IST

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து எஸ்.பி. வி. சியாமளா தேவி ஆய்வு செய்தாா்.

திருப்பத்தூா், வாணியம்பாடி, ஜோலாா்பேட்டை, ஆம்பூா் ஆகிய தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஞாயிற்றுக்கிழமை போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸாருக்கு விரிவான விளக்கங்களுடன் அறிவுரைகள் வழங்கினாா்.

மேலும், பாதுகாப்பு பணிக்காக எஸ்.பி சியாமளாதேவி தலைமையில் போலீஸ் அதிகாரிகள், போலீஸாா் மற்றும் துணை ராணுவம், தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் ஊா்க்காவல் படை 810 போ் ஈடுபடுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.