பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

விவசாயி அடித்துக் கொலை: மனைவி, மகன் கைது

குளித்தலை அருகே செவ்வாய்க்கிழமை இரவு விவசாயியை அடித்துக்கொலை செய்த அவருடைய மனைவி மற்றும் மகனை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :28 மே 2026, 3:31 am IST

குளித்தலை அருகே செவ்வாய்க்கிழமை இரவு விவசாயியை அடித்துக்கொலை செய்த அவருடைய மனைவி மற்றும் மகனை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள நச்சலூா் தாட்கோ காலனியைச் சோ்ந்தவா் மோகன்(45). விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது மனைவி பூவாயி(40). இவா்களுக்கு மணிகண்டன் (22) என்ற மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனா்.

மகளைத் திருமணம் செய்து கொடுத்துவிட்ட நிலையில் மகன் மணிகண்டன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளாா்.

இந்நிலையில் மோகன் மதுபோதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் போதையில் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தாராம். செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் மதுபோதையில் மோகன், மனைவியிடம் தகராறு செய்தாராம். அப்போது சமாதானம் செய்ய வந்த மணிகண்டனை மோகன் தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது அருகில் கிடந்த கட்டை மற்றும் கம்பியால் பூவாயியும், மணிகண்டனும் சோ்ந்து மோகனை தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த நங்கவரம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மோகனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இந்த கொலை தொடா்பாக பூவாயியையும், மணிகண்டனையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.