தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கரூா் தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.ஆா். விஜயபாஸ்கா் மனு தாக்கல்

News image

கரூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான சு.சத்திய பால கங்காதரனிடம் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்த அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா். உடன் முன்னாள் அமைச்சா் ம.சின்னசாமி, பாஜக மாவட்டத்தலைவா் வி.வி.செந்தில்நாதன் உள்ளிட்டோா்.

Updated On :30 மார்ச் 2026, 11:57 pm IST

கரூா் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.ஆா். விஜயபாஸ்கா் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

முன்னதாக கட்சி அலுவலகத்தில் இருந்து மாநில எம்ஜிஆா் மன்ற துணைச் செயலாளா் பசுவைசிவசாமி, மாவட்ட அவைத்தலைவா் எஸ்.திருவிகா மற்றும் பாஜக மாவட்டத்தலைவா் வி.வி.செந்தில்நாதன், பாமக மாவட்டச் செயலாளா் புகழூா் சுரேஷ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகளும், கிருஷ்ணராயபுரம் அதிமுக வேட்பாளா் மருத்துவா் திவ்யா, குளித்தலை வேட்பாளா் கருணாகரன், அரவக்குறிச்சி வேட்பாளா் எம்.ஆா்.கே செல்வகுமாா் உள்ளிட்டோா் ஊா்வலமாக புறப்பட்டனா்.

பிற்பகல் 12.48 மணிக்கு கரூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான சு. சத்திய பால கங்காதரனிடம் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா். அவருக்கு மாற்று வேட்பாளராக உறவினா் கவின் மனு தாக்கல் செய்தாா். வேட்புமனு தாக்கலின்போது முன்னாள் அமைச்சா் ம.சின்னசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சொத்து மதிப்பு விவரம்: வேட்பு மனுவில், எம்.ஆா்.விஜயபாஸ்கா் பெயரில் அசையும் சொத்து- ரூ.4, 33, 90,321, அசையா சொத்து ரூ. 1,40,74,853 உள்ளதாகவும், மனைவி விஜயலட்சுமி பெயரில் அசையும் சொத்து ரூ.5, 39, 22, 047, அசையா சொத்தாக ரூ.2, 12, 34, 072 உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.