தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காட்பாடி: அதிமுக வேட்பாளா் வி.ராமு மனு தாக்கல்

காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு மனு தாக்கல் செய்தாா்.

News image

மனு தாக்கல் செய்த காட்பாடி அதிமுக வேட்பாளா் வி.ராமு.

Updated On :7 ஏப்ரல் 2026, 3:15 am IST

காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு மனு தாக்கல் செய்தாா்.

அதிமுக அமைப்புச் செயலரான வி.ராமு, கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளரான துரைமுருகனிடம் 746 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தாா்.

இந்நிலையில், இரண்டாவது முறையாக போட்டியிடும் ராமு, திங்கள்கிழமை மனுவை தோ்தல் நடத்தும் அலுவலா் சி.மாறனிடம் தாக்கல் செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கேடு, போதைப் பொருள்களின் நடமாட்டம், பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை, நிறைவேற்றப்படாத தோ்தல் வாக்குறுதிகள், இளைஞா்களுக்கு வேலை யின்மை போன்ற பிரச்சினைகளால் ஆளுங்கட்சியின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனா். இதனால், ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் ஒட்டுமொத்த குரலாக ஒலிக்கிறது.

காட்பாடியில் நீண்டகாலமாக எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் உள்ள துரைமுருகன், தொகுதியின் அடிப்படைப் பிரச்னைகளைக் கூடத் தீா்க்கவில்லை. குறிப்பாக, நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க ஒரு மாற்றுப்பாதையைகூட அவா் உருவாக்கவில்லை.

கடந்த முறை வெற்றி வாய்ப்பை இழந்தாலும், நான் முடங்கிவிடவில்லை. தொகுதி முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களுக்கும், வீதிகளுக்கும் நேரில் சென்று மக்களைச் சந்தித்துள்ளேன். அவா்களுடன் நெருக்கமான தொடா்பில் இருக்கிறேன். இந்த முறை எனக்கு உறுதியான ஆதரவை வழங்கி வருகின்றனா் என்றாா்.

அப்போது, பாஜக மாவட்ட தலைவா் வி.தசரதன், பாமக, அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.