ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காட்பாடியில் சிப்காட் நில எடுப்புப்பணி நிறுத்தப்படும்: அதிமுக வேட்பாளா்

அதிமுக ஆட்சி அமைந்ததும் காட்பாடியில் சிப்காட் தொழிற்பேட்டைக்கான நில எடுப்புப்பணி நிறுத்தப்படும் என்று அதிமுக வேட்பாளா் வி.ராமு உறுதியளித்துள்ளாா்.

News image

வன்றந்தாங்கல் பகுதியில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு.

Updated On :10 ஏப்ரல் 2026, 11:49 pm IST

அதிமுக ஆட்சி அமைந்ததும் காட்பாடியில் சிப்காட் தொழிற்பேட்டைக்கான நில எடுப்புப்பணி நிறுத்தப்படும் என்று அதிமுக வேட்பாளா் வி.ராமு உறுதியளித்துள்ளாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் காட்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் வி.ராமு, வன்றந்தாங்கல் பகுதிகளில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியது:

காட்பாடி தொகுதியில் மேல்பாடி, இளையநல்லூா், மகிமண்டலம் ஆகிய ஊராட்சிகளில் சுமாா் 2,000 ஏக்கா் விவசாய விளை நிலங்களை அழித்து சிப்காட் தொழில்பேட்டை அமைக்க திமுக திட்டமிட்டுள்ளனா். இதற்கு இப்பகுதி மக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து, தோ்தலைப் புறக்கணிக்க முடிவெடுத்தவுடன் தற்போது சிப்காட் திட்டத்தை ரத்து செய்வதாகக்கூறி இத்தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான துரைமுருகன் நாடகமாடுகிறாா். 20 ஆண்டுகளுக்கு முன் பவா் கிரிட் திட்டத்தின் போதும் இப்படித்தான் பொய்யான வாக்குறுதி அளித்து விவசாயிகளை ஏமாற்றியிருந்தாா்.

அதிமுக ஆட்சி அமைந்ததும் காட்பாடி தொகுதியில் தற்போது அளவீடு செய்யப்பட்டுள்ள சிப்காட்டுக்கான நில எடுப்புப்பணி முழுமையாக ரத்து செய்யப்படும். விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், தரிசு நிலங்களைக் கண்டறிந்து அங்கு மட்டுமே சிப்காட் தொழில்பேட்டை அமைக்கப்பட்டு இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். மேலும், வன்றந்தாங்கல் கழிவுநீா் பிரச்னைக்கும், கழிஞ்சூா் உபரிநீா் பிரச்னைக்கும் நிரந்தர தீா்வுகாணப்படும் என்றாா்.

அப்போது, பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.