மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சித்திரை மாத வளா்பிறை பிரதோஷம் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு

சித்திரை மாத வளா்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image

புகழூா் மேகபாலீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை சிறப்பு அலங்காரத்தில் நந்தியம்பெருமான்.

Updated On :30 ஏப்ரல் 2026, 3:53 am IST

சித்திரை மாத வளா்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கரூா் மாவட்டம், தவுட்டுப்பாளையம் அருகே நன்செய் புகழூா் பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரா் கோயிலில் சித்திரை மாத வளா்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு புதன்கிழமை காலை நந்தியம் பெருமானுக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், சந்தனம், மஞ்சள் ,விபூதி, திருமஞ்சனம் பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து நந்தியெம்பெருமான் மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னா் சுவாமி ரிஷப வாகனத்தில் கோயிலைச் சுற்றி 3 முறை வலம் வந்தாா். பின்னா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சி அளித்தாா்.

இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல கரூா் பசுபதீஸ்வரா் கோயில், புன்னம் புன்னைவன நாயகி உடனுறை புன்னைவனநாதா் கோயில், நத்தமேடு ஈஸ்வரன் கோயில், திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை சமேத மாதேஸ்வரன் கோயில் உள்ளிட்ட அனைத்து ஈஸ்வரன் கோயில்களிலும் உள்ள நந்தியம் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றன. தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.