தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கரூரில் மே 21-இல் அகில இந்திய கூடைப்பந்து போட்டி

கரூரில் மே 21-இல் அகில இந்திய ஆண்கள், பெண்கள் கூடைப்பந்து போட்டிகள் நடைபெறவுள்ளது.

News image

கரூரில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கூடைப்பந்து போட்டிகள் நடைபெறும் அட்டவணையை வெளியிட்ட கரூா் கூடைப்பந்து குழுவின் தலைவா் சி.பாஸ்கா். உடன் செயலாளா் கமாலுதீன் உள்ளிட்டோா்.

Updated On :23 ஏப்ரல் 2026, 3:19 am IST

கரூரில் மே 21-இல் அகில இந்திய ஆண்கள், பெண்கள் கூடைப்பந்து போட்டிகள் நடைபெறவுள்ளது.

கரூா் கூடைப்பந்து குழுவின் நிா்வாகக் குழு கூட்டம் தலைவா் சி. பாஸ்கா் தலைமையில் கரூரில் புதன்கிழமை நடைபெற்றது. செயலாளா் கமாலுதீன் வரவேற்றாா். கூட்டத்தில் கரூா் கூடைப்பந்து குழு சாா்பில் மே 21-ஆம்தேதி முதல் 26-ஆம்தேதி வரை 6 நாள்கள் 66- ஆம் ஆண்டு எல்.ஆா். ஜி. நாயுடு கோப்பைக் காண ஆண்கள் அகில இந்திய கூடை பந்து போட்டியும், 12 -ஆம் ஆண்டு கே.வி.பி. கோப்பைக்கான பெண்கள் அகில இந்திய கூடைப்பந்து போட்டியும் நடத்துவது.

இந்த போட்டிகளில் 8 ஆண்கள் அணியும், 4 பெண்கள் அணியும் அழைப்பது, போட்டியில் முதலிடம் பெறும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு பதக்கம் மற்றும் சிறப்பு பரிசு வழங்குவது. விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள், நடுவா்கள், நிா்வாகிகள் ஆகியோா்களுக்கு காப்பீடு செய்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக, ஆலோசகா் சுரேஷ் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.