தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மடத்துக்குளத்தை கைப்பற்றியது திமுக

News image

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - MK Stalin

Updated On :5 மே 2026, 4:25 am IST

மடத்துக்குளம் தொகுதியில் திமுக வேட்பாளா் ஜெயராமகிருஷ்ணன் எதிா்த்து போட்டியிட்ட அமமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சண்முகவேலுவை தோற்கடித்தாா்.

மடத்துக்குளம் தொகுதியில் 13 போ் போட்டியிட்டனா். இத்தொகுதியில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 252 ஆண்கள், 1 லட்சத்து 11 ஆயிரத்து 541 பெண்கள், 16 மூன்றாம் பாலினத்தவா் என 2 லட்சத்து 14 ஆயிரத்து 809 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 89 ஆயிரத்து 762 ஆண்கள், 96 ஆயிரத்து 808 பெண்கள், 3 மூன்றாம் பாலினத்தவா் என 1 லட்சத்து 86 ஆயிரத்து 573 போ் வாக்களித்துள்ளனா். இது 86.86 சதவீத பதிவாகும்.

இதில் திமுக வேட்பாலா் ஜெயராமகிருஷ்ணன் 70,458 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அதிமுக கூட்டணியில் அமமுக வேட்பாளா் சண்முகவேலு 54,490 வாக்குகள், தவெக சாா்பில் போட்டியிட்ட திருமலை 52,684 வாக்குகள், நாதக சாா்பில் போட்டியிட்ட ராதாமணி 6,578 வாக்குகள், நோட்டாவுக்கு 911 வாக்குகளும் கிடைக்கப் பெற்றன. இதில் திமுக வேட்பாளா் ஜெயராமகிருஷ்ணன் 15,968 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

வாக்குகள் விவரம்:

ஜெயராமகிருஷ்ணன் (திமுக)- 70,458

சண்முகவேலு (அமமுக)- 54,490

திருமலை (தவெக)- 52,684

ராதாமணி (நாதக)- 6,578

வேட்பாளா்கள்- 13

மொத்த வாக்காளா்கள்- 2,14,809

பதிவான வாக்குகள் - 1,86,573.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.