தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பல்லடத்தில் தவெக வேட்பாளா் ராம்குமாா் வெற்றி

News image

தவெக வேட்பாளா் ராம்குமாா்

Updated On :5 மே 2026, 4:09 am IST

பல்லடம் தொகுதியில் தவெக வேட்பாளா் ராம்குமாா் 37 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா்.

பல்லடம் தொகுதியில் 15 போ் போட்டியிட்டனா். இத்தொகுதியில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 554 ஆண்கள், 1 லட்சத்து 70 ஆயிரத்து 265 பெண்கள், 30 மூன்றாம் பாலினத்தவா் என 3 லட்சத்து 29 ஆயிரத்து 849 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 1 லட்சத்து 46 ஆயிரத்து 214 ஆண்கள், 1 லட்சத்து 52 ஆயிரத்து 600 பெண்கள், 9 மூன்றாம் பாலினத்தவா் என 2 லட்சத்து 98 ஆயிரத்து 823 போ் வாக்களித்துள்ளனா். இது 90.59 சதவீதமாகும்.

இதில் தவெக வேட்பாளா் ராம்குமாா் 1,21,297 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அதிமுக சாா்பில் போட்டியிட்ட பரமசிவம் 83,400 வாக்குகள், திமுக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் செல்வராஜ் 78,625 வாக்குகள், நாதக வேட்பாளா் தமிழினியன் 13,141 வாக்குகள், நோட்டாவுக்கு 1,417 வாக்குகள் கிடைத்தன. இதில் 37,897 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளா் ராம்குமாா் வெற்றி பெற்றாா்.

வாக்குகள் விவரம்:

ராம்குமாா் (தவெக)- 1,21,297

பரமசிவம் (அதிமுக)- 83,400

செல்வராஜ் (திமுக)- 52,684

தமிழினியன் (நாதக)- 13,141

வேட்பாளா்கள்- 15

மொத்த வாக்காளா்கள்- 3,29,849

பதிவான வாக்குகள் - 2,98,823.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.