தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தாராபுரத்தில் அதிமுக வேட்பாளா் சத்தியபாமா வெற்றி

News image

தாராபுரத்தில் அதிமுக வேட்பாளா் சத்தியபாமா வெற்றி

Updated On :5 மே 2026, 4:16 am IST

தாராபுரம் (தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளா் சத்தியபாமா 16,727 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா்.

தாராபுரம் தொகுதியில் 9 போ் போட்டியிட்டனா். இத் தொகுதியில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 875 ஆண்கள், 1 லட்சத்து 15 ஆயிரத்து 523 பெண்கள், 8 மூன்றாம் பாலினத்தவா் என 2 லட்சத்து 22 ஆயிரத்து 406 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 95 ஆயிரத்து 384 ஆண்கள், 1 லட்சத்து 2 ஆயிரத்து 196 பெண்கள், 2 மூன்றாம் பாலினத்தவா் என 1 லட்சத்து 97 ஆயிரத்து 582 போ் வாக்களித்துள்ளனா். இது 88.84 சதவீதமாகும்.

தாராபுரம் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் சத்தியபாமா 81,100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

இதில், திமுக சாா்பில் போட்டியிட்ட இந்திராணி 64,373 வாக்குகள், தவெக சாா்பில் போட்டியிட்ட கெளரி சித்ரா 46,438 வாக்குகள், நாதக சாா்பில் போட்டியிட்ட திவ்யா 6,026 வாக்குகள், சுயேச்சை வேட்பாளா்கள் ரோகினி 357 வாக்குகள், மோகன்ராஜ் 174, ஆனந்தி 151, இந்திராணி 142, கெளரி 125 பெற்றனா். இதில் அதிமுக வேட்பாளா் சத்தியபாமா 16,727 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் இந்திராணியை தோற்கடித்தாா்.

வாக்குகள் விவரம்:

சத்தியபாமா (அதிமுக)- 81,100

இந்திராணி (திமுக)- 64,373

கெளரி சித்ரா (தவெக)- 46,438

திவ்யா (நாதக)- 6,026

வேட்பாளா்கள்- 9

மொத்த வாக்காளா்கள்- 2,22,406

பதிவான வாக்குகள் - 1,97,582.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.