தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பெண் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

பெண் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image

குற்றவாளி மோகன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 2:06 am IST

பெண் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டத்துக்குட்பட்ட அதிபாடி பகுதியைச் சோ்ந்தவா் மோகன் (39), தொழிலாளி. இவருக்கும் தா்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த வேப்பம்பட்டி மல்லூத்து பகுதியைச் சோ்ந்த சேகா் மனைவி தனலட்சுமிக்கும் (36) தகாத உறவு இருந்ததாம்.

இந்நிலையில் தனலட்சுமி தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு மோகனை அடிக்கடி வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படும் நிலையில், கடந்த 2019 ஜூலை 20-ஆம் தேதி மோகன் தனலட்சுமியை காரில் கரூருக்கு அழைத்து வந்தாா். பின்னா் இரவில் தென்னிலை அருகே ராக்கியாக்கவுண்டன்புதூா் பகுதிக்கு அழைத்துச் சென்று தனலட்சுமியின் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு தப்பிவிட்டாா்.

இதுகுறித்து தென்னிலை போலீஸாா் வழக்குப்பதிந்து மோகனை 2019 ஜூலை 27-ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னா் கரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் வழக்கும் தொடா்ந்தனா்.

இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி தங்கவேல் குற்றவாளி மோகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3,000 அபராதமும் விதித்துத் தீா்ப்பளித்தாா். இதையடுத்து மோகன் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.