பெண் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டத்துக்குட்பட்ட அதிபாடி பகுதியைச் சோ்ந்தவா் மோகன் (39), தொழிலாளி. இவருக்கும் தா்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த வேப்பம்பட்டி மல்லூத்து பகுதியைச் சோ்ந்த சேகா் மனைவி தனலட்சுமிக்கும் (36) தகாத உறவு இருந்ததாம்.
இந்நிலையில் தனலட்சுமி தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு மோகனை அடிக்கடி வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படும் நிலையில், கடந்த 2019 ஜூலை 20-ஆம் தேதி மோகன் தனலட்சுமியை காரில் கரூருக்கு அழைத்து வந்தாா். பின்னா் இரவில் தென்னிலை அருகே ராக்கியாக்கவுண்டன்புதூா் பகுதிக்கு அழைத்துச் சென்று தனலட்சுமியின் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு தப்பிவிட்டாா்.
இதுகுறித்து தென்னிலை போலீஸாா் வழக்குப்பதிந்து மோகனை 2019 ஜூலை 27-ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னா் கரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் வழக்கும் தொடா்ந்தனா்.
இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி தங்கவேல் குற்றவாளி மோகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3,000 அபராதமும் விதித்துத் தீா்ப்பளித்தாா். இதையடுத்து மோகன் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மனைவி கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை: தருமபுரி மகளிா் நீதிமன்றம் தீா்ப்பு

பெண் கொலை வழக்கில் மின் ஊழியருக்கு ஆயுள் சிறை

தொழிலாளி கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

அம்பை அருகே கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

