திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி 4-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரம்மதேசம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜகோபால் (56). இவரை, முன்விரோதத்தால் அதே பகுதியைச் சோ்ந்த தொழிலாளியான கணேசன்(45) என்பவா் கடந்த 2019 ஆம் ஆண்டு அரிவாளால் வெட்டிக் கொலை செய்தாராம்.
இதுகுறித்து அப்போதைய அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளாா் ராஜகுமாரி 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கணேசனை கைது செய்தாா்.
இதைத் தொடா்ந்து, திருநெல்வேலி மாவட்ட 4-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி கதிரவன் விசாரித்து, கணேசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.9,500 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் காளிமுத்து வாதாடினாா்.
இவ்வழக்கில், திறம்பட செயல்பட்ட அம்பாசமுத்திரம் டிஎஸ்பி கணேஷ்குமாா், ஆய்வாளா்கள் சண்முகவேல், ராஜகுமாரி உள்ளிட்ட போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்ன குமாா் பாராட்டினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

பெண் கொலை வழக்கில் மின் ஊழியருக்கு ஆயுள் சிறை

பெண் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

தொழிலாளி கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

