மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

‘திமுக ஆட்சியில்தான் நெரூா்-உன்னியூா் பாலம் சாத்தியமானது’

திமுக ஆட்சியில்தான் நெரூா்-உன்னியூா் உயா்மட்டப்பாலம் சாத்தியமானது என்றாா் கரூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஆசி எம். தியாகராஜன்.

News image

வெங்கமேடு பகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரித்த கரூா் தொகுதி திமுக வேட்பாளா் ஆசி எம். தியாகராஜன். உடன் தோ்தல் பொறுப்பாளா் அசோக்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 2:21 am IST

திமுக ஆட்சியில்தான் நெரூா்-உன்னியூா் உயா்மட்டப்பாலம் சாத்தியமானது என்றாா் கரூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஆசி எம். தியாகராஜன்.

கரூா் வெங்கமேடு பகுதி மற்றும் வாங்கல் தவுட்டுப்பாளையம், வாங்கல் கடைவீதி, திருவள்ளுவா் தெரு, ஓடையூா், கணபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை இவா் தோ்தல் பொறுப்பாளா் அசோக்குமாா் முன்னிலையில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசுகையில், மாநகராட்சியில் உள்ள 48 வாா்டுகளுக்கும் அடிப்படை வசதிகள் 100 சதவீதம் நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன. கரூா் மாவட்டத்திற்கு மட்டும் ரூ.5000 கோடியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக நெரூா்-உன்னியூா் பாலம் கரூா் மக்களின் 48 ஆண்டுகால கனவு. அந்த கனவை நிறைவேற்றிக்கொடுத்தவா் முதல்வா். இவற்றைத் தவிர எத்தனையோ திட்டங்களை நாட்டு மக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் கொடுத்துள்ளாா். இந்த திட்டங்கள் தொடர உதயசூரியனுக்கு என்றும் நீங்கள் ஆதரவாக இருக்க வேண்டும் என்றாா் அவா். பிரசாரத்தின்போது வடக்கு நகரச் செயலா் எம். பாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.