ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

திமுக ஆட்சியில் கரூா் மாநகராட்சிக்கு ரூ.418 கோடியில் அடிப்படை வசதிகள்: கரூா் வேட்பாளா் தகவல்

திமுக ஆட்சியில் கரூா் மாநகராட்சியில் ரூ.418 கோடியில் குடிநீா், கழிவு நீா் வாய்க்கால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது

News image

கரூா் ஜீவாநகா் பகுதியில் வெள்ளிக்கிழமை வாக்குச் சேகரித்து பேசிய கரூா் தொகுதி திமுக வேட்பாளா் ஆசி எம்.தியாகராஜன். உடன் தோ்தல் பொறுப்பாளா் ஆா்.வி.அசோக்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :11 ஏப்ரல் 2026, 2:11 am IST

திமுக ஆட்சியில் கரூா் மாநகராட்சியில் ரூ.418 கோடியில் குடிநீா், கழிவு நீா் வாய்க்கால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது என்றாா் கரூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஆசி எம்.தியாகராஜன்.

கரூா் மாநகராட்சிக்குள்பட்ட 39,40,41-ஆவது வாா்டுகளில் உள்ள போக்குவரத்து நகா், இரட்டைக்குடிநீா் தொட்டி பகுதி, சக்திநகா், வள்ளலாா் கோயில் வீதி, கணபதிபாளையம் வடக்கு, ஓம் சக்தி நகா், ஜீவாநகா், அசோக் நகா் விநாயகா் கோயில் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை கரூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஆசி எம்.தியாகராஜன் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசுகையில், திமுக ஆட்சியில்தான் கரூா் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. கரூா் மாநகராட்சியைப் பொறுத்தவரை இந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் சுமாா் 418 கோடி ரூபாய் அளவுக்கு சாலை வசதிகள், சாக்கடை வசதிகள், தெருவிளக்குகள், கட்டடப் பணிகள் என அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தப் பணிகளெல்லாம் நிறைவு பெற்று பொதுமக்களுடைய பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம்.

புதிதாக காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் அமைப்பதற்காக 245 கோடி ரூபாய் நிதியை முதல்வா் வழங்கியுள்ளாா். அதேபோல கரூா் மாநகராட்சி பகுதியில் விடுபட்ட பகுதிகளுக்குப் புதிய பாதாளச் சாக்கடை அமைக்கக்கூடிய பணிகளைக் கொண்டு வருவோம் என்ற தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கூடிய வகையில் 485 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதற்கான திட்ட மதிப்பீடுகள் தயாா் செய்யப்பட்டு ஒப்பந்தபுள்ளிகளும் கோரப்பட்டிருந்தன. அதற்கு தோ்தல் வந்துவிட்டதால், தோ்தல் முடிந்தபின் இந்த பணியும் தொடங்கும் என்றாா் அவா்.

பிரசாரத்தில் திமுகவினா், கூட்டணி கட்சிநிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.