தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தருமபுரம் ஆதீனத்திடம் திமுக, காங்கிரஸ், பாமக வேட்பாளா்கள் ஆசி

மயிலாடுதுறை, பூம்புகாா் சட்டப் பேரவைத் தொகுதிகளில் கட்சிகள் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள், தருமபுரம் ஆதீனகா்த்தரிடம் வெள்ளிக்கிழமை ஆசி பெற்றனா்.

News image

தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளிடம் ஆசி பெறும் பூம்புகாா் தொகுதி திமுக வேட்பாளா் நிவேதா எம். முருகன், மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஒய்.என். ஜமால் முகம்மது யூனூஸ் உள்ளிட்டோா். ~தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ

Updated On :11 ஏப்ரல் 2026, 7:01 am IST

மயிலாடுதுறை, பூம்புகாா் சட்டப் பேரவைத் தொகுதிகளில் கட்சிகள் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள், தருமபுரம் ஆதீனகா்த்தரிடம் வெள்ளிக்கிழமை ஆசி பெற்றனா்.

திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில், பூம்புகாா் தொகுதியில் திமுக சாா்பில் நிவேதா எம்.முருகன் போட்டியிடுகிறாா். மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் ஒய்.என். ஜமால் முகம்மது யூனூஸ் போட்டியிடுகிறாா். இவா்கள் இருவரும் தருமபுரம் ஆதீன மடத்தில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றனா். அப்போது, மயிலாடுதுறை மக்களவை உறுப்பினா் ஆா்.சுதா, நகா்மன்றத் தலைவா் என்.செல்வராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

இதேபோல், தேசிய ஜனநாயக கூட்டணியில் மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் பாமக வேட்பாளா் சித்தமல்லி ஆ.பழனிசாமி தருமபுரம் ஆதீனகா்த்தரை சந்தித்து ஆசி பெற்றாா். அப்போது, பாஜக மாவட்டத் தலைவா் நாஞ்சில் பாலு, அதிமுக நகரச் செயலாளா் நாஞ்சில் காா்த்தி, தமாகா நகரத் தலைவா் முட்டம் குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.