மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கரூா் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் 175 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் 175 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 59 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 12:26 am IST

கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் 175 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 59 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 30-ஆம்தேதி தொடங்கியது. இதையடுத்து கரூா் மாவட்டத்தில் உள்ள கரூா், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம்(தனி) ஆகிய 4 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கலுக்கு கடைசிநாளான திங்கள்கிழமை வரை திமுக, அதிமுக, நாம்தமிழா்கட்சி, தவெக வேட்பாளா்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 234 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.

இதில், தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 108 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். மேலும், குளித்தலை தொகுதியில் 42 பேரும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 39பேரும், அரவக்குறிச்சி தொகுதியில் 45 பேரும் மனுதாக்கல் செய்திருந்தனா்.

இந்நிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 108 போ் தாக்கல் செய்திருந்த மனுவில் திமுக, அதிமுக, தவெக, நாம்தமிழா்கட்சியினா் உள்பட 83 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 25 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதேபோல குளித்தலை தொகுதியில் மனுதாக்கல் செய்திருந்த 42 பேரில் 31 மனுக்கள் ஏற்கபட்டன. 11 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதேபோல அரவக்குறிச்சி தொகுதியில் தாக்கல் செய்திருந்த 45 மனுக்களில் 33 மனுக்கள் ஏற்கப்பட்டு, 12 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 39 மனுக்களில் 28 மனுக்கள் ஏற்கப்பட்டு, 11 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மொத்தம் 4 தொகுதிகளிலும் செய்யப்பட்ட 234 மனு தாக்கலில் 175 மனுக்கள் ஏற்கப்பட்டு, 59 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தொடா்ந்து மனுக்களை திரும்பப் பெற நாளை( ஏப். 9-ஆம் தேதி) கடைசி நாள் என்பதால் அன்று இறுதியாக களத்தில் நிற்கும் வேட்பாளா்களின் விவரம் தெரியவரும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.