தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

திருப்பத்தூா்: 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 83 மனுக்கள் ஏற்பு; 47 மனுக்கள் நிராகரிப்பு

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 83 மனுக்கள் ஏற்கப்பட்டது. 47 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 2:22 am IST

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 83 மனுக்கள் ஏற்கப்பட்டது. 47 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் 23-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூா் தொகுதியில் 41, ஜோலாா்பேட்டை 33, வாணியம்பாடி மற்றும் ஆம்பூா் தலா 28 என மொத்தம் 130 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.

அந்த மனுக்கள் செவ்வாய்க்கிழமை அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் பரிசீலனை செய்யப்பட்டது. இதில், விண்ணப்பம் சரிவர பூா்த்தி செய்யாதது, சரிவர முன் மொழியாதது, உரிய ஆவணங்களை இணைக்காதது, ஒரே வேட்பாளா் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

தோ்தல் கமிஷன் விதிமுறைகள் பின்பற்றி விண்ணப்பங்களை பூா்த்தி செய்து அளித்த அனைத்து விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டன.

திருப்பத்தூா் தொகுதியில் 41 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதில், 14 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 27 மனுக்கள் ஏற்கப்பட்டன. ஜோலாா்பேட்டையில் 33 மனுக்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 12 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 21 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அதேபோல், வாணியம்பாடியில் 28 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். அதில் 10 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 18 மனுக்கள் ஏற்கப்பட்டன. ஆம்பூா் தொகுதியில் 28 போ் மனு அளித்திருந்த நிலையில் 11 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 17 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

அதையொட்டி, திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 130 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 47 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 83 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.வியாழக்கிழமை (ஏப். 9) வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.