தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

திண்டுக்கல் மாவட்டத்தில் 57 மனுக்கள் நிராகரிப்பு

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கு மொத்தம் 220 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், 57 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 4:25 am IST

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கு மொத்தம் 220 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், 57 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூா், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், வேடசந்தூா் என மொத்தம் 7 பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் போட்டியிடுவதற்காக மொத்தம் 220 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

பழனி தொகுதியில் 33, ஒட்டன்சத்திரத்தில் 27, ஆத்தூரில் 26, நிலக்கோட்டையில் 28, நத்தத்தில் 41, திண்டுக்கல்லில் 35, வேடசந்தூரில் 30 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில், வேட்பு மனு பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பழனி தொகுதியில் 7 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 26 மனுக்கள் ஏற்கப்பட்டன. ஒட்டன்சத்திரத்தில் 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 19 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆத்தூரில் 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 18 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. நிலக்கோட்டையில் 11 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 17 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. நத்தம் தொகுதியில் 10 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 31 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. திண்டுக்கல்லில் 6 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 29 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. வேடசந்தூரில் 7 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 23 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.