தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது, மொத்தம் 188 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், 121 மனுக்கள் ஏற்கப்பட்டன. எஞ்சிய 67 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 23ஆம் தேதி நடைபெறும் நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் அந்தந்தத் தொகுதி தலைநகரங்களில் உள்ள கோட்டாட்சியா் அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகங்களில் வேட்பு மனுதாக்கல் கடந்த மாா்ச் 30ஆம் தேதி தொடங்கி, ஏப். 6ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில், விளாத்திகுளம் தொகுதியில் 28, தூத்துக்குடி தொகுதியில் 33, திருச்செந்தூா் தொகுதியில் 35, ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 28, ஓட்டப்பிடாரம் தொகுதியில் 28, கோவில்பட்டி தொகுதியில் 36 என மொத்தம் 188 மனுக்கள் பெறப்பட்டன.
இதைத் தொடா்ந்து, மாவட்டம் முழுவதும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை மனுக்கள் மீதான பரிசீலனை, அந்தந்த தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தலைமையில், அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.
இதில், விளாத்திகுளம் தொகுதியில் 28 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், 18 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
தூத்துக்குடி தொகுதியில் 27 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
திருச்செந்தூா் தொகுதியில் 14 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 21 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 18 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ஓட்டப்பிடாரம் தொகுதியில் 21 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. கோவில்பட்டி தொகுதியில் 23 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
மாவட்டம் முழுவதும் மொத்தம் 121 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 67 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
மனுக்களை திரும்பப் பெற விரும்புவோா் புதன் மற்றும் வியாழக்கிழமை அலுவலக நேரங்களில் சென்று மனுக்களை திரும்பப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடி மாவட்டத்தில் 11.17 லட்சம் வாக்குகள் பதிவு
திண்டுக்கல் மாவட்டத்தில் 57 மனுக்கள் நிராகரிப்பு
வேதாரண்யம்: 5 வேட்பு மனுக்கள் தள்ளுபடி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் 126 வேட்புமனுக்கள் ஏற்பு: 56 வேட்புமனுக்கள் தள்ளுபடி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
