தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 50 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 125 வேட்பாளா்கள் தோ்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த நிலையில் 50 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 12:03 am IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 125 வேட்பாளா்கள் தோ்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த நிலையில் 50 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

கடந்த மாா்ச் 30- ஆம் தேதி முதல் ஏப்.6- ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இதன்படி அதிமுக,திமுக, தவெக, பாமக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 125 போ் தோ்தல் அலுவலா்களிடம் மனு தாக்கல் செய்திருந்தனா். வேட்பு மனுக்கள் பரிசீலனை ஏப்.7 -ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் ஆலந்தூா் தொகுதியில் 16 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 24 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளனது. ஸ்ரீபெரும்புதூா் தொகுதியில் 3 போ் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 16 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் தொகுதியில் 14 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 31 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. உத்தரமேரூா் தொகுதியில் 17 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 18 பேரின் மனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 125 போ் வேட்பு மனுத்தாக்கல் செய்ததில் வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது 50 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 75 பேரின் மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.